சரவணனின் வலைக்குறிப்புகள்

Wednesday, June 30, 2004

எத்தனை காலம்தான் இப்படி?

அண்ணா அறிவாலயம் கட்டியதில் சரியான அளவு இடம் பொதுமக்கள் உபயோகத்திற்காக அளிக்கவில்லை என்று பிரச்சனை கிளப்பியிருக்கிறார்கள் ஆளுங்கட்சித் தரப்பு. ஆளுங்கட்சி அனுமதி அளித்த கட்டிடங்களில் பல முறைகேடுகள் நடந்திருக்கிறது எனக் கத்துகிறது எதிர்கட்சி. இனி என்ன, போராட்டம், வழக்குகள், நீதிமன்றங்கள் என பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இதனால் ஏற்படும் அநாவசிய செலவுகளெல்லாம் எவன் அப்பன் வீட்டு வரிப்பணம்?

நம்ம ஊர்களில் எல்லாத் தெருவோரமும் கடைதான். ரோட்ட விட்டு கொஞ்சம் கீழ இறங்குனா ஏதாவது கடை வாசப்படியிலதான் முட்டிக்கனும். இந்த மாதிரி கடை வைக்க கொடுத்த அனுமதியெல்லாம் முறையானதாவா இருக்கும்? எந்த கடைக்காரராவது தன் வாகனம் நிறுத்தவாவது இடம் விட்டு கடை கட்டியிருப்பாரா? நெரிசல்கள் நமது வாழ்க்கையில் ரொம்பப் பழகிப்போய் அது ஒரு அசெளகரியமாகவே நமக்கு தெரிவதில்லை.

அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் பொதுமக்களும் தன் பணப்பையை மட்டும் கவனத்தில் கொள்வது எப்பொழுது குறைகிறதோ, அப்பொழுதுதான் நாடு உருப்படும்.

1 மறுமொழி:

  • saravanan,

    ezhuthunga...
    Mumbai-la thinamum vaazhviyal saarntha anubavangal kidaikkum illaiyaa? athai pakirnthu kollungal. mathy solvathu pol ezhuthi pazhaguvom...
    (paari.blogspot.com)
    anbudan
    Balaji-paari

    By Blogger Balaji-Paari, at 6:21 AM  

Post a Comment

<< முகப்பு