அனுதாபங்கள்
நேரமின்மை காரணமாக இப்பொழுதுதான்....
கும்பகோணம் சம்பவம் மிகத்துயரமான ஒன்று. எனது ஆழ்ந்த அனுதாபங்களை சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாம் வல்ல இறை அவர்களை தேற்றட்டும். சில மாற்றங்கள் ஏற்படுவதற்காக கொடுக்கப்படும் விலைகள் மிக அதிகம். இனியாவது அதிகாரிகளும், பொது மக்களும் தத்தம் பொறுப்புணர்ந்து, கடமைகளை சரியாகச் செய்ய வேண்டும். இப்போது ஏற்பட்ட வடு எல்லோர் மனதிலும் இருந்தாலே, பணத்திற்காக இதுபோன்ற முறையற்ற பள்ளிகளுக்கு அனுமதி அளிப்பது நடக்காது. இது போன்ற பள்ளிகளை பொதுமக்களும் புறக்கணிக்க வேண்டும்.
வலைப்பதியும் நண்பர்கள் பலரும் ஒருங்கிணைந்து சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களின் முயற்சிகள் பலனடைய வாழ்த்துக்கள்.
கும்பகோணம் சம்பவம் மிகத்துயரமான ஒன்று. எனது ஆழ்ந்த அனுதாபங்களை சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாம் வல்ல இறை அவர்களை தேற்றட்டும். சில மாற்றங்கள் ஏற்படுவதற்காக கொடுக்கப்படும் விலைகள் மிக அதிகம். இனியாவது அதிகாரிகளும், பொது மக்களும் தத்தம் பொறுப்புணர்ந்து, கடமைகளை சரியாகச் செய்ய வேண்டும். இப்போது ஏற்பட்ட வடு எல்லோர் மனதிலும் இருந்தாலே, பணத்திற்காக இதுபோன்ற முறையற்ற பள்ளிகளுக்கு அனுமதி அளிப்பது நடக்காது. இது போன்ற பள்ளிகளை பொதுமக்களும் புறக்கணிக்க வேண்டும்.
வலைப்பதியும் நண்பர்கள் பலரும் ஒருங்கிணைந்து சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களின் முயற்சிகள் பலனடைய வாழ்த்துக்கள்.


0 மறுமொழி:
Post a Comment
<< முகப்பு